கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Sunday 26 December, 2010

பி.எப். வட்டி கணக்கிடப்படுவது எப்படி?

அநேகமாக எல்லோருக்குமே பி.எப். எனப்படும் சேம நல  நிதி திட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கும். இதில் நாம் போடும் பணத்துக்கு வட்டி எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள் ரெக்கரிங் டெபாசிட் பற்றி அறிந்திருக்கலாம். இதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வங்கியில் செலுத்தி ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களுக்கோ பிறகு வட்டியோடு பணத்தைத் திரும்பப் பெறலாம். அதே போல், ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மாதாமாதம் பி.எப்.பில் போடுகிறோம். தற்போது பி.எப்.புக்கு 9.5 % வட்டி வழங்கப்படுகிறது. இது எப்படி கணக்கிடப் படுகிறது என்று இப்போது பார்ப்போம்.

ஒரு நபர் சம்பளத்திலிருந்து மாதா மாதம் 4000 ரூபாய் பி.எப்.புக்காக பிடித்தம் செய்யப் படுகிறது எனக் கொள்வோம். 2010 மார்ச் 31-ந்தேதி அன்று 200000 ரூபாய் இருப்பில் இருக்கிறது எனக் கொண்டால்

ஆரம்ப இருப்பு                                                                        200000
(அரசாங்கத்தில் மார்ச் மாத சம்பளம் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் வழங்கப் படுகிறது என்பதால், மார்ச் முதல் பிப்ரவரி வரையிலான பிடித்தங்களுக்குத்தான்  வட்டி கணக்கிடப் படுகிறது)
    இப்பொழுது வட்டி எப்படி கணக்கிடவேண்டுமென்றால்,
2912000 x 9.5 / 1200 =  23053.33 அதாவது 23053 ரூபாய் 

ஆக, 2010-11 ம் ஆண்டிற்கான உங்கள் பி.எப். கணக்கு இப்படி இருக்கும்.

ஆரம்ப இருப்பு                                200000
வருடத்துக்கான வரவு                  48000
வட்டி                                                     23053  
மொத்த இறுதி இருப்பு                 271053


இப்படி கணக்கிடுவதில் உள்ள வசதி என்னவென்றால், ஒரு வேளை, இடையில் உங்கள் பிடித்தம் கூடவோ குறையவோ செய்தால், அதற்கேற்றாற்போல் மேலே கண்ட அட்டவணையை மாற்றி உங்கள் பி.எப் பணத்தைக் கணக்கிடலாம். 


டிஸ்கி: மதிய அரசு ஊழியர்களுக்கான பி.எப் வட்டி எட்டு சதவீதம் மட்டுமே! அப்பொழுது இந்த கணக்கீடு, 2912000 x 8 / 1200 = 19413.33 அதாவது 19413 ரூபாய் மட்டுமே 

Sunday 19 December, 2010

கணக்கில் ஒரு எல்.கே.ஜி. பாடம்


போன பதிவுல கணக்கு சம்பந்தமா டவுட் கேக்க சொன்னா, என்னை மாட்டி விட்டுட்டாரு சோ விசிறி. அது சரி, இப்படி பேரு வச்சிக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்தலைனா எப்படி?
அவரையே பதில் சொல்லச் சொல்லி திருப்பி விட்டுட்டோமில்ல? சரி விடுங்க.
இப்போ முதல்ல ஒரு பாடம். அதாவது ஒரு எண்ணை இரண்டு முதல் பன்னிரண்டு வரை மீதி வராமல் வகுக்க முடியுமா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம். (ஏழால் வகுபடுமா என்பதைக் கண்டுபிடிக்க எனக்குத் தெரியாது)

எந்த ஒரு எண்ணும் இரட்டைப்படை எண்ணில்(அதாவது 0,2,4,6,8) முடிந்தால் அந்த எண் இரண்டால் வகுபடும். 
இதற்கு உதாரணம் தேவைப்படாது.


ஒரு எண்ணில் உள்ள இலக்கங்களை எல்லாம் கூட்டி அந்த கூட்டல் தொகை மூன்றால் வகுபட்டால், அந்த எண் மூன்றால் வகுபடும்.

உதாரணமாக, 135687 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். இதில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால், 1+3+5+6+8+7 = 30 = 3+0 = 3 கூட்டல் தொகை மூன்றால் வகுபடுவதால், 135687 என்ற எண் மூன்றால் வகுபடும்.

ஒரு எண்ணில் உள்ள கடைசி இரண்டு இலக்கங்கள் (ஒன்று, பத்து இலக்கங்களில் உள்ள எண்கள்) பூஜ்யமாகவோ அல்லது நான்கால் வகுபடுமானால், அந்த எண் நான்கால் வகுபடும்.

உதாரணமாக, 125648970 என்பதில் கடைசி இரண்டு இலக்கங்களான 70 நான்கால் வகுபடாது எனவே, இந்த எண்ணும் நான்கால் வகுபடாது.  ஆனால் 125648968 என்ற எண் நான்கால் வகுபடும்.

ஒரு எண்ணில் உள்ள கடைசி இலக்கம் 0 அல்லது 5 ஆக இருந்தால், அந்த எண் ஐந்தால் வகுபடும்.
இதற்கும் உதாரணம் தேவைப்படாது.

ஒரு எண் இரண்டாலும் மூன்றாலும் வகுபடுமானால் ஆறாலும் வகுபடும்.
இதற்கு உதாரணம் வேண்டுமா?

ஒரு எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் 0  ஆகவோ, அல்லது எட்டால் வகுபடும் எண்ணாகவோ இருந்தால், அந்த எண் எட்டால் வகுபடும்.

ஒரு எண்ணின் இலக்கங்களைக் கூட்டினால் வரும் விடை 9 ஆக இருக்குமானால், அந்த எண் ஒன்பதால் வகுபடும்.

ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 0 ஆக இருந்தால் பத்தால் வகுபடும்.

ஒரு எண்ணின் இரட்டைப் படை இலக்கங்களைக் கூட்டி அதே போல் ஒற்றைப்படை இலக்கங்களையும் கூட்டி இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் 0 ஆகவோ அல்லது பதினொன்றால் வகுபட்டாலோ அந்த எண் பதினொன்றால் வகுபடும்.
உதாரணமாக, 475684 என்பதில்
இரட்டைப் படை இலக்கங்களின் கூட்டுத்தொகை = 7+6+4 = 17
ஒற்றைப் படை இலக்கங்களின் கூட்டுத்தொகை = 4+5+8 = 17
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் = 17 - 17 = 0
எனவே இந்த எண் (475684) பதினொன்றால் வகுபடும்.

ஒரு எண் மூன்றாலும் நான்காலும் வகுபட்டால் அந்த எண் பன்னிரண்டால் வகுபடும்.


ஓகே. மற்றதை பின்னர் பார்க்கலாம்.

கணக்கோடு இல்லை பிணக்கு

எல்லாருக்கும் வணக்கம்!

பொதுவாவே தேர்வுன்னா எல்லாருக்கும் ஒரு பயம். அதுலேயும் கணக்கு பாடம்னா நிறைய பேருக்கு அலர்ஜி. அதைப் போக்குவதற்காக இந்த ப்ளாக் துவங்கப் பட்டிருக்கிறது.

உங்களுக்கு கணக்கு சம்பந்தமா எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு ஈமெயில் செய்யுங்க.
desikadasan@gmail.com
எனக்கு தெரிஞ்ச வரையில் அந்த சந்தேகத்தை clear பண்றேன்.

கேள்விகளை பின்னூட்டத்திலும் கேட்கலாம்.

வாங்க, கணக்கா, நாமளான்னு முடிவு பண்ணிடலாம்.